News December 23, 2025
புதுகை அருகே டிராக்டர் மோதி பரிதாப பலி!

மாத்தூரை சேர்ந்த பரணி 21, கூலித் தொழிலாளியான இவர், ஆவூரில் இருந்து மாத்தூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சிங்கத்தாகுறிச்சி அருகே சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சென்ற டிராக்டரின் மீது எதிர்பாராமல் பைக் மோதியது. இதில் காயமடைந்த பரணி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார். இதுகுறித்து மண்டையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 17, 2026
புதுகை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <
News January 17, 2026
புதுகை: புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.16) புதுகை நகர்ப்பகுதி, வல்லத்திராக்கோட்டை, வெள்ளனூர், வட காடு, பனையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் என எஸ்பி அலுவலகம் தெரிவித்துள்ளது.
News January 17, 2026
புதுகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு புதுகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.


