News April 30, 2024

₹23,000 கோடி நிறுவனத்தை உருவாக்கிய விவசாயி மகன்

image

இந்தியாவின் முன்னணி சோப் பவுடர் நிறுவனமான நிர்மா, ₹23,000 கோடிக்கும் மேல் வருவாய் கொண்டதாகும். குஜராத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி மகனான கர்சன்பாய் படேல் என்பவரே ₹15,000 கடன் வாங்கி அதனை 1969இல் தொடங்கினார். முதலில் சைக்கிளில் சென்று நிர்மா பவுடரை விற்றார். பிறகு சிறிய ஆலையை ஏற்படுத்தி, கிலோ ₹15க்கு விற்றதால், நல்ல வரவேற்பு பெற்று ஆண்டுக்கு ₹7,000 கோடி லாபம் ஈட்டி நிர்மா சாதனை படைத்தது.

Similar News

News November 20, 2025

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இயக்குநர்கள்

image

சமீப ஆண்டுகளில், இந்திய சினிமாவில், நடிகர்களுக்கு இணையாக இயக்குநர்களும் கொண்டாடப்பட்டு வருகின்றனர். அதில், சிலர் தங்களது படைப்புகளுக்கு ஏற்ப சம்பளம் பெறுகின்றனர். அவர்களில், அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இயக்குநர்கள் யார், அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 20, 2025

சபரிமலையில் குழந்தைகளை பாதுகாக்க VI Band அறிமுகம்

image

சபரிமலைக்கு குழந்தைகளை அழைத்துச் செல்பவர்களுக்கு நெரிசலால் கடும் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் சபரிமலையில் குழந்தைகள் காணாமல் போனால் கண்டறிய கேரள போலீஸ், வோடபோன்-ஐடியா(VI) உடன் இணைந்து Safety Bands-ஐ கொண்டு வந்துள்ளது. இதனை VI கடைகள் அல்லது ஆன்லைனிலும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள டிஜிட்டல் குறியீட்டை வைத்து குழந்தைகள் காணாமல் போனால் எளிதாக கண்டுபிடிக்க முடியுமாம்.

News November 20, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 525
▶குறள்:
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
▶பொருள்: வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.

error: Content is protected !!