News April 30, 2024
அம்மோனியா வாயு கசிந்த இடத்தில் அரசு அதிகாரிகள் ஆய்வு

கோவை, காரமடை ஒன்றியம், சிக்காரம்பாளையம் ஊராட்சி சென்னி வீரம்பாளையத்தில் உள்ள சிப்ஸ் கம்பெனியில் அம்மோனியா வாயு கசிவினால் நேற்று விபத்து ஏற்பட்டது. அதனை மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் காரமடை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சு.சுரேந்திரன் ஆய்வு மேற்கொண்டு மேலும் அவ்வூரில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மதிய உணவு வழங்கினார்.
Similar News
News August 20, 2025
கோவை மாநகர காவல் துறை முதலிடம்!

கோவை மாநகரில் ‘பீட்’களின் எண்ணிக்கையை அதிகரித்து ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டதால், அவசர அழைப்பு தகவலை பெற்ற 11.35 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இது திருப்பூரில் 13 நிமிடங்கள், சென்னையில் 17 நிமிடங்கள், சேலத்தில் 21 நிமிடங்கள், நாமக்கல்லில் 24 நிமிடங்கள் என உள்ள நிலையில், கோவை தமிழகத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது.
News August 20, 2025
வீட்டு வசதி வாரியம் சாா்பில் வட்டி தள்ளுபடி அறிவிப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் திட்டப் பகுதிகளில் வீட்டுமனை மற்றும் குடியிருப்புகளைப் பெற்றவர்களில், வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியவர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. என கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் நிலுவைத் தொகை முழுவதையும் செலுத்தி, தங்கள் பெயருக்கான கிரையப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்
News August 20, 2025
கோவை: தோஷங்களை நீக்கும் கரிவரதராஜ பெருமாள்!

கோவை, குப்பிச்சிபாளையத்தில் புகழ்பெற்ற கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. சக்திவாய்ந்த பெருமாளை வணங்கினால், ஜாதக ரீதியிலான தோஷங்கள் நீங்குமாம். இங்கு பச்சை பயறும், உருண்டை வெல்லமும் பெருமாளுக்கு படைத்து, பின்பு அவற்றை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கினால், தோஷங்கள் அனைத்தும் முற்றிலும் நீங்குமாம். வெள்ளிக்கிழமைகளில் மாங்கல்ய பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறதாம்.SHAREit