News December 23, 2025

குளித்தலையில் பெண் கடத்தல்? பரபரப்பு

image

குளித்தலை, நச்சலூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (37). இவரின் மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் விஜயலட்சுமி வீட்டிற்கு வந்த ரஞ்சித் அவரையும், அவரது கணவரையும் தாக்கி அவரது மகளை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று விட்டதாக விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நங்கவரம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Similar News

News January 1, 2026

கிருஷ்ணராயபுரம் அருகே வசமாக சிக்கிய பெண்கள்!

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேட்டு மகாதானபுரம் மற்றும் பில்லா பாளையம் பகுதியில் வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மதுவிற்ற சங்கர் மனைவி அன்னக்கிளி (55), வாசுதேவன் மனைவி ரேவதி (55) ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 52 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

News December 31, 2025

கரூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
யாருக்காவது நிச்சயம் இது உதவும், எனவே இதனை அனைவருக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

கரூர் அருகே பெண் அதிரடி கைது!

image

கந்தம்பாளையத்தை சேர்ந்த விசாலாட்சிக்கும், கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நடையனூர் அருகே கார்த்திக்கின் சகோதரி அமுதாவும் (50), அவரது மகன் ஜெகனும் வீட்டில் இருந்தபோது விசாலாட்சி மற்றும் ஆண் ஒருவர் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த வேலாயுதம்பாளையம் போலீசார் விசாலாட்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!