News December 23, 2025
JUST IN: திண்டுக்கல் ரிங் ரோட்டில் விபத்து!

திண்டுக்கல் கிழக்கு வட்டம், தோட்டனூத்து கிராமம் புளியம்பட்டி அருகே நேற்று புதிதாக அமைக்கப்பட்ட ரிங் ரோட்டில், இரண்டு- நான்கு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆரியமாலா (74), விஜயா (70) மற்றும் மீனா (52) படுகாயமடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
Similar News
News December 31, 2025
பழனியில் கோடி கணக்கில் மோசடி? பெண் அதிரடி கைது!

பழனி மற்றும் தாழையூத்தை சேர்ந்த ஆடிட்டர் முத்துநாராயணன் என்பவர் தனது நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் கலையரசி (43), ரஞ்சிதா (34) மற்றும் கவுதம் (34) ஆகிய மூவரும் கடந்த 2 ஆண்டுகளாகப் போலி ரசீதுகள் தயாரித்து சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்ததாகக் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மேலாளர் கலையரசியை கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்ற இருவரைத் தேடி வருகின்றனர்.
News December 31, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி நேற்று (டிச.30) இரவு முதல் இன்று காலை வரை காவலர்கள் திண்டுக்கல் நகர்ப்பகுதி, ஊரகப்பகுதி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
News December 31, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி நேற்று (டிச.30) இரவு முதல் இன்று காலை வரை காவலர்கள் திண்டுக்கல் நகர்ப்பகுதி, ஊரகப்பகுதி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.


