News December 23, 2025

அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக, எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 26.12.2025 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Similar News

News December 25, 2025

அரியலூர்: வண்ண விளக்குகளால் கம்யூனிஸ்ட் அலுவலகம்

image

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கட்சி அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. நாளை காலை 10 மணி அளவில் கட்சியின் கொடியேற்று விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 25, 2025

அரியலூர்: கடன் நீக்கும் தையல்நாகி அம்மன்!

image

அரியலூர், பொய்யாத நல்லூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தையல்நாயகி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நீண்ட நாள் கடன் பிரச்சனை உள்ளவர்கள், குடும்ப பிரச்சினை மற்றும் தொழில் பிரச்சனை உள்ளவர்கள் மூலவரான தையல்நாயகி அம்மனுக்கு படையல் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டால், வேண்டியது நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News December 25, 2025

அரியலூர்: இனி பட்டா பெறுவது ஈசி!

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை லஞ்சம் கொடுக்காமல் ஆன்லைனில் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். இதனை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!