News April 30, 2024
தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்?

மக்களவைத் தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தாஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுத் தேர்தலின்போது கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன் என்று வெள்ளியன்று நடைபெறும் அடுத்த விசாரணையில் ED பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Similar News
News August 28, 2025
கச்சத்தீவை விட்டுத்தர முடியாது: இலங்கை உறுதி

மதுரை மாநாட்டில் கச்சத்தீவை மத்திய அரசு மீட்டுத்தர வேண்டும் என விஜய் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்றும், தேர்தல் காலம் என்பதால் அரசியலுக்காக ஒவ்வொருவரும் ஒரு கருத்து தெரிவித்து வருவதாகவும் இலங்கை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கச்சத்தீவை மீட்க இந்திய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
News August 28, 2025
மனதை வருடும் மாளவிகா மோகனன்

விஜய்யின் ‘மாஸ்டர்’, விக்ரமின் ‘தங்கலான்’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மாளவிகா மோகனன். தமிழில் இப்போது பெரிதாக பட வாய்ப்பு இல்லை என்றாலும் மலையாளத்தில் கலக்கி வருகிறார். நடிப்பை தாண்டி இன்ஸ்டாவில் செம ஆக்டிவாக இருப்பவர் மாளவிகா. மாடர்ன், ஹோம்லி என இரண்டிலும் கலக்கும் அவர், சேலையணிந்து எடுத்த போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரசிகர்களை கவர்ந்த போட்டோஸை மேலே கண்டு மகிழுங்கள்.
News August 28, 2025
வாக்குச் சீட்டு முறைதான் ஒரே தீர்வு: சீமான் திட்டவட்டம்

வாக்கு சீட்டு முறை வந்தால்தான் நேர்மையாக வாக்குப்பதிவு நடக்க வாய்ப்புள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். வாக்கு இயந்திரத்தை ஊழலில் பெருத்த நாடுகள் மட்டுமே பயன்படுத்துவதாகவும் சாடியுள்ளார். பாஜக ஆட்சியில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் சொல்லும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் முறையாக வாக்குப்பதிவு நடைபெற்றது என சொல்லமுடியுமா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.