News December 23, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியின் அதிகாரிகளின் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.23) காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 26, 2025

ஆம்பூர்: வீட்டில் மதுபானம் விற்ற பெண் கைது!

image

ஆம்பூரை அடுத்த பெரியகுப்பம் பகுதியில் நேற்று (டிச.25) போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ராதிகா (45) என்பவரது வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் போலீசார் ராதிகா வீட்டிலிருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ராதிகாவை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 26, 2025

திருப்பத்தூர்: DEGREE போதும் – SBI வங்கியில் வேலை!

image

திருப்பத்தூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 26, 2025

திருப்பத்தூர்: ராணுவர் வீட்டில் கொள்ளை முயற்சி

image

திருப்பத்தூர்: சிவசக்தி நகரை சேர்ந்த ராஜா (36) ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா. நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம், 4 முகமூடி கொள்ளையர்கள் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதை CCTV மூலம் பார்த்த தீபா பக்கத்து வீட்டாருக்கு தெரிவித்துள்ளார். அவர்கள் வெளியே வந்து பார்க்க, கொள்ளையர்கள் உடனே அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!