News April 30, 2024

பொதுமக்களுக்கு ORS கலந்த நீர் வழங்கல்

image

கடும் கோடை வெப்பத்தின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் விதமாக, மேல்மலையனூர் வட்டம், வளத்தி ஊராட்சியில் சுகாதாரத் துறை சார்பில் ORS கரைசலை பொதுமக்களுக்கு திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் இன்று (ஏப் 30) வழங்கினார்.
இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், வளத்தி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார், துணைத் தலைவர் கோவிந்தன் உள்ளிடோர் உடனிருந்தனர்.

Similar News

News November 5, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 4, 2025

விழுப்புரம்: பொன்முடிக்கு மீண்டும் கட்சி பதவி!

image

விழுப்புரம் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. விழுப்புரம் நகர திமுக அலுவலகம் மற்றும் காந்தி சிலை முன்பு திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். சைவ,வைனவ சர்ச்சை பேச்சால் இவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டது.

News November 4, 2025

பனை விதைகளை நட்டு வைத்த ஆட்சியர் அப்துல் ரஹ்மான்

image

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட அய்யங்கோயில்பட்டு ஊராட்சி முத்தாம்பாளையம் ஏரிக்கரையோரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,அவர்கள் இன்று (நவ.04) பனை விதைகளை நட்டு வைத்தார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ரா.வெங்கடேஷ்வரன், உதவி இயக்குநர் மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!