News April 30, 2024
டாஸ்மாக் நிர்வாக உத்தரவுக்கு அன்புமணி கண்டனம்

பீர் உற்பத்தியை அதிகரிக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் கொளுத்துவதால் கூலிங் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், மதுக் கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதனைத் தவிர்க்க உற்பத்தியை அதிகரிக்க ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் நடப்பது அரசாங்கமா? அல்லது மது வணிக நிறுவனமா எனக் கேள்வி எழுப்பினார்.
Similar News
News January 31, 2026
மாதத்திற்கு எவ்வளவு எண்ணெய் பயன்படுத்தலாம்?

சமையலில் உணவின் சுவைக்கும், நறுமணத்துக்கும், எண்ணெய் முக்கியமானது. ஆனால் அதனை அளவோடு பயன்படுத்துவதே நல்லது. டாக்டர்களின் கூற்றுப்படி, ஒரு நபர் ஒரே மாதத்திற்கு அரை லிட்டர் (500 மில்லி) எண்ணெய் பயன்படுத்த வேண்டும். இதனால் ஒரு நாளைக்கு சுமார் 2 – 3 ஸ்பூன் எண்ணெய் மட்டுமே செலவாகும். அதுவே 4 பேர் கொண்ட குடும்பம் என்றால் ஒரு மாதத்திற்கு சுமார் 2 லிட்டர் எண்ணெய் பயன்படுத்தலாம் என்கின்றனர்.
News January 31, 2026
இந்திய அணிக்கு அஸ்வின் வேண்டுகோள்!

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 ஸ்பின்னர்களை களமிறக்க வேண்டாம் என Ex இந்திய வீரர் அஷ்வின் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணி ஒரு முக்கிய ஸ்பின்னர் & ஒரு ஸ்பின் வீசும் ஆல்-ரவுண்டருடன் விளையாட வேண்டும் என்றும், அபிஷேக் சர்மா பேட்டிங்குடன் தனது பந்துவீச்சிலும் கவனம் செலுத்தினால், அவர் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக வருவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News January 31, 2026
எங்கு மரியாதை கிடைக்கிறதோ அங்குதான் கூட்டணி: பிரேமலதா

தமிழகத்தில் அத்தனை கட்சிகளும் தங்களுக்கு தோழமை கட்சிகள்தான். பேசுவது, பழகுவது வேறு, கூட்டணியில் சேர்வது வேறு என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நெல்லையில் பேசிய அவர், இது தங்கள் கட்சி, எப்போ முடிவு எடுக்க வேண்டுமோ அப்போது அறிவிப்போம். யாருடைய அவசரத்துக்கும் சொல்ல முடியாது என்றும், தங்களுக்கு எங்கு உரிய மரியாதை, எங்கு உரிய நியாயம் கிடைக்கிறதோ, அங்கு தான் கூட்டணி எனவும் தெரிவித்துள்ளார்.


