News December 22, 2025
பொங்கல் பரிசாக ₹5,000 கொடுங்க: EPS கூறும் காரணம்

திமுக, மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதால் மக்கள் மனம் குளிர, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ₹5,000 வழங்க வேண்டும் என EPS கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் இருந்த போது நாங்கள் ₹2,500 வழங்கினோம். அப்போது எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின், ஏன் ₹5,000 வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பினார். அதே கோரிக்கையை இப்போது நாங்கள் வைக்கிறோம் என்றார்.
Similar News
News January 1, 2026
பொங்கல் பரிசு… அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க TN அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக ₹248 கோடி ஒதுக்கியுள்ள அரசு, 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, ஒரு கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையடுத்து, ஒரு சில நாள்களில் ₹3,000 ரொக்கப் பணம் குறித்த அறிவிப்பையும் CM ஸ்டாலின் வெளியிடுவார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 1, 2026
ஆபரேஷன் சிந்தூர்.. இந்தியா பெருமிதம்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த சான்று என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், இந்திய படைகள் திறம்பட செயல்பட்டு PAK-ன் தீவிரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்ற செய்தியை உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் சொல்லியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News January 1, 2026
புத்தாண்டு ஸ்பெஷல் கோலங்கள்!

வருடத்தின் முதல் நாளான இன்று வீட்டுவாசலில் கோலமிடுவது சிறப்புக்குரிய விஷயமாகும். புத்தாண்டை வரவேற்று கோலமிடுவதால் ஆண்டு முழுவதுமே வீட்டில் மகிழ்ச்சி ததும்பும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், வீட்டுவாசலில் போடக்கூடிய சில வண்ணமயமான புத்தாண்டு கோலங்கள் போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை Swipe செய்து பார்த்து வீட்டில் தவறாமல் முயற்சிக்கவும்.


