News December 22, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பரவி வரும் போலியான கஸ்டமர் கேர் சேவைகளிடமிருந்து எண்ணுகளுக்கு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. வங்கிச் சேவை, மொபைல் சேவை, ஆன்லைன் சேவை என எதுவாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அப் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மோசடியில் சிக்கினால் உடனே 1930 சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
Similar News
News December 25, 2025
திண்டுக்கல்: மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே சில்வார்பட்டி பகுதியில் பிரபு (38) என்பவர், குடும்பத் தகராறு காரணமாக மனைவி ஈஸ்வரியை (35) சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். இந்நிலையில் கொலையாளி பிரபுவை, சாணார்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 25, 2025
திண்டுக்கல்லில் லோன் ஆப் மோசடி! உஷார்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, போலியான லோன் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ வழிகளைத் தவிர பிற ஆப்களின் மூலம் கடன் பெறுவது ஆபத்தானது என்றும், இவ்வகை மோசடிகள் தனிப்பட்ட விவரங்களைப் பெற்று மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்கினால் 1930 சைபர் எண் அல்லது www.cybercrime.gov.in புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
News December 25, 2025
திண்டுக்கல்: இதை SAVE பண்ணிக்கோங்க!

திண்டுக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!


