News December 22, 2025
“நாளை என்பதே இல்லை” கோவையில் அற்புத கோயில்!

கோவை, நரசிம்மநாயக்கன் பாளையத்தில், கடந்த 300 ஆண்டு காலமாக லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இங்கு பக்தர்கள் வைத்திடும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுவதால், ‘‘நாளை என்பதே நரசிம்மப் பெருமாளிடம் இல்லை’’ என்கிறார்கள் இறையருளை உணர்ந்தவர்கள். மேலும், ராகு, கேது தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்தும், மஞ்சள் காப்பிட்டும் வேண்டிக் கொள்கின்றனர். SHARE பண்ணுங்க!
Similar News
News December 23, 2025
கோவை: பெண் குளிப்பதை வீடியோ எடுத்த காவலர்!

கோவை இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான வீடு மதுக்கரையில் உள்ளது. இந்த வீட்டில் அவர், அவரது மகள், உறவினர் மகள் வசித்து வருகின்றனர். இருவரும் கல்லூரி பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டரை வாகனத்தில் இறக்கிவிட வந்த போலீஸ்காரர் மாதவ கண்ணன், பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட இன்ஸ்பெக்டர், இதுகுறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
News December 23, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, (டிச.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சின்னியம்பாளையம், கரையாம்பாளையம், மையிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், சிட்ரா ஒரு பகுதி, கோல்ட்வின்ஸ் ஒரு பகுதி, கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, அண்ணா பல்கலை வளாகம், பாரதியார் பல்கலை வளாகம், மருதமலை அடிவாரம், நாவவூர் பிரிவு, பொம்மணம்பாளையம், டாடா நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 23, 2025
கோவை: ரூ.50,000 சம்பளத்தில் TNPSC-இல் வேலை!

கோவை மக்களே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ், நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளுக்கான, 76 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.20ம் தேதிக்குள் இந்த<


