News December 22, 2025
திருப்பத்தூர்: 8 வயது சிறுமி விபத்தில் பலி!

ஜோலார்பேட்டை, எஸ்.கோடியூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகள் ஜோஷிகா (8) அப்பகுதியிலுள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி பள்ளி முடிந்து சிறுமி சந்தைக்கோடியூரில் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார். தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News January 8, 2026
திருப்பத்தூர் பெண்கள் கவனத்திற்கு: மிஸ் பண்ணிடாதீங்க!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு SHARE!
News January 8, 2026
திருப்பத்தூர்: INDIA POST-ல் வேலை – NO EXAM!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது, 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News January 8, 2026
திருப்பத்தூரில் தொடர்ந்து தேர்வு- பறந்தது உத்தரவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில் மாவட்ட அளவில் கடைசியாக இடம்பெற்ற 60 அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு முடிவுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்றது. தேர்ச்சியை தவறவிட்ட மாணவர்களுக்கு சிறு சிறு தேர்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.


