News December 22, 2025

திருவாரூர்: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது?

image

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-ல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், <>hrcnet.nic.in<<>> என்ற இணையதளம் மூலமாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உங்களால் புகார் அளிக்க முடியும். இதன் மூலம் கோர்ட், கேஸ் என்ற அலைச்சல் இல்லாமல் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Similar News

News December 30, 2025

திருவாரூர்: 10th போதும்-போஸ்ட் ஆபிஸில் வேலை!

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.

News December 30, 2025

திருவாரூர்: அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

image

முத்துப்பேட்டை, ஆலங்காடு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தலைவர் குணாவதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து அரசு துறை ஓய்வூதியர்கள் சங்க தலைவர் கோவி.ரெங்கசாமி, சிஐடியூ மாவட்ட குழு உறுப்பினர் செல்லத்துரை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.

News December 30, 2025

திருவாரூர்: லாரி மோதி ஒருவர் பலி

image

திருவாரூர், நீடாமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கோவில்வெண்ணி பகுதியில், திருவாரூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில், நேற்று (டிச.29) காலை 8 மணி அளவில் லாரி அதிவேகமாக வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தற்போது நீடாமங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!