News December 22, 2025
மயிலாடுதுறை: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது ?

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-இல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், hrcnet.nic.in என்ற இணையதளம் மூலமாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உங்களால் புகார் அளிக்க முடியும். இதன் மூலம் கோர்ட்-கேஸ் என்ற அலைச்சல் இல்லாமல் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். ஷேர்
Similar News
News December 26, 2025
மயிலாடுதுறை: இனி அலைச்சல் வேண்டாம்

பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://mayiladuthurai.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 26, 2025
மயிலாடுதுறை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் 04364-299952 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News December 26, 2025
BREAKING மயிலாடுதுறை: தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து

குத்தாலம் அருகே அய்யனார்குடி நாட்டாறு சட்ரஸ் அருகே பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து ஆற்றின் கரையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 30 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


