News December 22, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள், கூட்டறவு சங்கம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள், விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 25 பால் உற்பத்தியாளர்கள் அல்லது விவசாயிகள் ஒன்றிணைந்து, கூட்டுறவு சங்கம் அமைக்க செம்மண்டலத்தில் உள்ள கூட்டுறவு துணை பதிவாளர் (பால்வளம்) அலுவலகத்தை, தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 27, 2025
கடலூர்: பெண் குழந்தை உள்ளதா? உடனே விண்ணப்பிக்கவும்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய கடலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
கடலூர்: 15 வயது சிறுமி கர்ப்பம்; பாய்ந்த போக்சோ!

கடலூர் கம்மியம்பேட்டையை சேர்ந்தவர் கவுசிக் (19). இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சோர்வாக காணப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கௌசிக்கை தேடி வருகின்றனர்.
News December 27, 2025
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்!

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(டிச.25) இரவு 10 மணி முதல் இன்று(டிச.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


