News December 22, 2025
திருப்பத்தூர்: வட மாநில இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்!

செல்லறப்பட்டியை சேர்ந்த நெப்போலியன், ஹலோ பிரிக்ஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவரிடம் வேலை பார்த்த அரவிந்த் மான்ஜே வடமாநில வாலிபர், ஊருக்கு செல்வதாக கூறி அருகிலுள்ள மாட்டு பண்ணையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதையறிந்த நெப்போலியன், அவரை கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 26, 2025
திருப்பத்தூர்: ராணுவர் வீட்டில் கொள்ளை முயற்சி

திருப்பத்தூர்: சிவசக்தி நகரை சேர்ந்த ராஜா (36) ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா. நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம், 4 முகமூடி கொள்ளையர்கள் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதை CCTV மூலம் பார்த்த தீபா பக்கத்து வீட்டாருக்கு தெரிவித்துள்ளார். அவர்கள் வெளியே வந்து பார்க்க, கொள்ளையர்கள் உடனே அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 26, 2025
திருப்பத்தூர்: தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி!

திருப்பத்தூர் அருகே சின்ன உடையாமுத்தூரை சேர்ந்தவர் சூர்யா (24). கிளீனராக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் அரவிந்த் (25). இருவரும் நேற்று மதியம் 2 மணியளவில் சின்ன வெப்பாளம்பட்டியில் உள்ள தடுப்பணையில் குளித்து கொண்டு இருந்தபோது, திடீரென சூர்யா மாயமானார். இதுகுறித்து அளிக்கப்பட்ட தவளின் பேரில் தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய சூர்யாவை சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு பிணமாக மீட்டனர்.
News December 26, 2025
திருப்பத்தூரில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராம்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி நிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் தனித்துணை ஆட்சியர் பூஷண குமார் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


