News December 22, 2025

தி.மலை: துக்க வீட்டிற்கு சென்றவர் கொலை!

image

ஆரணி, பார்வதி அகரத்தை சேர்ந்த சந்துரு கடந்த 16ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்யும் பணி நடைபெற்றது. தகவலறிந்து வந்த களம்பூர் போலீசார், உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர். அங்கு வந்த சுதாகர் (55) போலீசுக்கு தகவலளித்ததாக நினைத்து சந்துருவின் தம்பி சஞ்சய் & லோகேஷ் சுதாகரை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். களம்பூர் போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர்.

Similar News

News December 28, 2025

தி.மலை: லைசன்ஸ் எடுக்க அலைய வேண்டாம்!

image

திருவண்ணாமலை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://<>parivahansewas<<>>.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News December 28, 2025

தி.மலை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News December 28, 2025

JUST NOW: வேன் மீது கார் மோதி விபத்து

image

செங்கம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசன்கன்னி கிராமத்தில் அதிகாலை சாலையில் சென்ற கார் ஆம்னி வேன் மோதிய விபத்தில் காரில் பயணித்த மூவர் படுகாயம். மேல் செங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காரில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!