News December 22, 2025
தஞ்சை: கார் மோதி பரிதாப பலி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சோலையப்பன் தெருவைச் சேர்ந்த ரெங்கநாதன், வீடு புரோக்கர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தஞ்சாவூர் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, பாபநாசம் அருகே மானாங்கோரை மெயின் ரோட்டில் எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News December 27, 2025
தஞ்சை: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை

ஒரத்தநாடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு ஆய்வு செய்த காவல்துறையினர் கண்ணத்தங்குடி கீழையூர் பகுதியை சேர்ந்த எட்வர்ட் அமல்ராஜ் (35) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், 550 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
News December 27, 2025
தஞ்சை: பெண் குழந்தை உள்ளதா? உடனே விண்ணப்பிக்கவும்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
தஞ்சை: மருத்துவமனையில் பாலியல் தொல்லை!

கும்பகோணம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி உறவினர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உதவியாக உறவினருடன் இருந்துள்ளார். இந்நிலையில் தூங்கிகொண்டிருந்த சிறுமியிடம் ராமகிருஷ்ணன் (22) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்க அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.


