News December 22, 2025

தர்மபுரி: சக்கரத்தில் தலை நசுங்கி கொடூர பலி!

image

பொன்னாகரம் அருகே பூசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சித்ரா(43). கணவன், மனைவி இருவரும் நேற்று(டிச.21) பைக்கில் தர்மபுரி நோக்கி சென்றனர். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சித்ரா, தனியார் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி கொடூரமாக பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 23, 2025

BREAKING: தர்மபுரி: போக்சோ கைதியான ஆசிரியர் மரணம்!

image

தர்மபுரி அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு கடந்த நவ.16ஆம் தேதி பாலியல் தொல்லை தந்த சமூக அறிவியல் ஆசிரியர் மணிவண்ணன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்தார். இந்நிலையில், நேற்று(டிச.22) இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே மருத்துவமனிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றபோது உயிரிழந்தார்.

News December 23, 2025

தர்மபுரி: கிணற்றில் தவறி விழுந்து துடிதுடித்து பலி!

image

பாபிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி(85). இவருடைய மனைவி கண்ணம்மாள்(80). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், நெற்று(டிச.22) காலை தனது தோட்டத்தின் பக்கத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த கண்ணம்மாள், மூழ்கி உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொம்மிடி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 23, 2025

தர்மபுரி: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

பென்னாகரம் அருகே அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார்(26) என்பவர் 12 வயது சிறுமிக்கு பாலிஅய்ல் தொல்லை தந்துள்ளார். இதனால், காயமடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிறுமி அளித்த புகாரின் பேரில், பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நவீன் குமாரை கைது செய்தனர்.

error: Content is protected !!