News December 22, 2025
குமரி: வீட்டின் முன் நிறுத்தப்பட்ட பைக் எரிப்பு!

குருந்தன் கோடு அருகே வர்த்தக நாடார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரும் இவரது மகன் மகள் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டு முன்பு இருந்த பைக்கை யாரோ ஒருவர் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மல்லிகா இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நேற்று போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
குமரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 2, 2026
குமரி மக்களே அரசு பஸ்ஸில் பிரச்சனையா?

குமரி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94875 99080 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News January 2, 2026
மாற்று வழியில் கன்னியாகுமரி – ஹைதராபாத் ரயில்

கன்னியாகுமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில் (ரயில் எண் 07229) ஜனவரி 02, 09, 23 மற்றும் 30 அன்று விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருப்பி விடப்படும். மதுரை, கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டையில் கூடுதல் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


