News December 22, 2025
டிசம்பர் 22: வரலாற்றில் இன்று

*தேசிய கணித நாள்.
*1851 – இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில், உத்தராகண்டின் ரூர்க்கி நகரத்தில் இயக்கப்பட்டது.
*1887 – கணிதமேதை இராமானுஜன் பிறந்தநாள்.
*1964 – தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியை புயல் தாக்கியதில் 1,800-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
Similar News
News December 25, 2025
முக்கிய மாவோயிஸ்ட் தளபதி என்கவுண்டர்

தலைக்கு ₹1.1 கோடி விலை நிர்ணயிக்கப்பட்ட மாவோயிஸ்ட் முக்கிய தளபதி கணேஷ் உய்க்கை (69) பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செய்தனர். ஒடிசாவில் உள்ள ரம்பா வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 2 பெண்கள் உள்பட மொத்தம் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். CRPF, BSF என மொத்தம் 23 குழுக்கள் இந்த வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், கொல்லப்பட்டவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
News December 25, 2025
அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை ராதிகா

அரசியலில் கலக்கி வரும் நடிகை ராதிகா, மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர முடிவு செய்துவிட்டாரோ..! என பலர் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில், முற்றிலும் அடையாளம் தெரியாத அளவில் ‘கிழவி’ கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். இப்படம் வரும் பிப்.20-ல் வெளியாகவுள்ளது.
News December 25, 2025
தமிழகத்திற்கு மீண்டும் மழை அலர்ட்

TN-ல் அடுத்த 7 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இன்று வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தென் கடலோர TN மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியே சென்றால் குடை, ரெயின் கோட் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் மக்களே!


