News December 22, 2025
தஞ்சை: பன்றிகளை சுற்றித்திரிய விட்டால் நடவடிக்கை

மதுக்கூர் பேரூராட்சியில் பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் விளைநிலங்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், சாலைகளில் விபத்துகள் நடப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. எனவே, வருகிற 25ஆம் தேதிக்குள் பன்றிகளின் உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில், பேரூராட்சி நிர்வாகம் மூலம் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும் என்றும், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
Similar News
News January 15, 2026
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும், பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் வரும் ஜன.24-ந் தேதி, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு ரேஷன் கடை, பொருட்கள் அல்லது சேவைகள் குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால் மனுவாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
News January 15, 2026
தஞ்சை: பொங்கல் சீர் கொண்டு சென்றவர் பரிதாப பலி

ஒரத்தநாடு சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்த விவசாயி திருநாவுக்கரசு (49), தனது குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு பொங்கல் சீர் கொடுக்க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சிற்றம்பலம் அம்மாகுளம் அருகே எதிரே வந்த கார் மோதியதில், திருநாவுக்கரசு உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 15, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.14) இரவு 10 முதல் இன்று (ஜன. 15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


