News December 22, 2025
தஞ்சை: பன்றிகளை சுற்றித்திரிய விட்டால் நடவடிக்கை

மதுக்கூர் பேரூராட்சியில் பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் விளைநிலங்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், சாலைகளில் விபத்துகள் நடப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. எனவே, வருகிற 25ஆம் தேதிக்குள் பன்றிகளின் உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில், பேரூராட்சி நிர்வாகம் மூலம் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும் என்றும், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
Similar News
News January 20, 2026
தஞ்சை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

தஞ்சை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 20, 2026
தஞ்சை: அரசு சுகாதார துறையில் வேலை

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது – 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 20, 2026
தஞ்சை: மரம் முறிந்து விழுந்து பரிதாப பலி!

ஏனாதிகரம்பை கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான சரவணன் (ஓட்டுநர்). இவர் தனது நண்பருடன் சேர்ந்து மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மரம் முறிந்து அவர் மீது விழுந்ததில், சரவணனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.


