News April 30, 2024
திருச்சி: பழிக்கு பழி.. 2 பேர் கைது!

திருச்சி,அரியமங்கலம் அருகே அதிமுக மாஜி கவுன்சிலர் மகன் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.பட்டப்பகலில் துப்பாக்கி, கத்தியுடன் வந்த மர்ம நபர்கள் முத்துக்குமாரை வெட்டி கொன்று தப்பித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக லோகநாதன், இளஞ்செழியன் இருவரையும் அரியமங்கலம் போலீசார் இன்று கைது செய்தனர். 2021ல் நடந்த சிலம்பரசன் கொலைக்கு பழிக்கு பழியாக தற்போது முத்துக்குமார் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 13, 2025
திருச்சி எம்.எல்.ஏ இனிகோ முதல்வருக்கு கடிதம்

திருச்சி எம்எல்ஏ இனிகோ, தமிழக முதலமைச்சருக்கு இன்று கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நாடு முழுவதும் கல்லறை திருநாள் வரும் நவ-2ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நவ.1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் தகுதி தேர்வான TNTED தேர்வு நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகவே கல்லறை திருநாளை முன்னிட்டு இந்த தேர்வு தேதியை மாற்றி அமைத்து தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
திருச்சி: மத்திய அரசு வேலை; EXAM கிடையாது!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில், பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பபடவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News August 13, 2025
திருவெறும்பூர்: ஐடிஐ சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலி இடங்களுக்கான நேரடி சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.