News April 30, 2024
இந்திய அணியில் பண்ட், ஜெய்ஸ்வால், துபே, சாம்சன்

20 ஓவர் உலகக் கோப்பை இந்திய அணியில் ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், சிவம் துபே, சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். காயத்தால் விளையாடாமல் இருந்து பல மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல்லில் களமிறங்கிய ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் அதிரடி வீரர்கள் ஜெய்ஸ்வால், சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோரும், ஐபிஎல்லில் கலக்கி வரும் சாஹலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Similar News
News August 28, 2025
எம்.ஜி.ஆர். பொன்மொழிகள்

*கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை
*புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது; அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும்
*உள்ளத்தில் உள்ள லட்சியத்திற்காக இறுதிவரை பாடுபட வேண்டும்
*நாம் வந்த வழியை மறந்துவிட்டோமானால் போகும் வழி நமக்குப் புரியாமல் போய்விடும்
*சுயநலமில்லாத நம்பிக்கை வெற்றி பெறும்
நீங்கள் உண்பவற்றில் மிகச் சிறந்தது, நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்.
News August 28, 2025
No Helmet No Petrol… எங்கு தெரியுமா?

‘தலைக்கவசம் உயிர்கவசம்’ என்பதை வலியுறுத்தும் வகையில் உ.பி.யில் புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை ‘ஹெல்மெட் இல்லையெனில் எரிபொருள் இல்லை’ என்ற பிரச்சாரத்தை அம்மாநில அரசு முன்னெடுத்துள்ளது. இது தண்டனை அல்ல, மாறாக வாகன ஓட்டிகளை சட்டத்தை கடைபிடிக்க எடுக்கப்பட்ட முயற்சி என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் ஊருக்கும் இது வேணுமா?
News August 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் ▶குறள் எண்: 441 ▶குறள்: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். ▶ பொருள்: அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.