News April 30, 2024
தமிழ்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஈழவேந்தன்

இலங்கை முன்னாள் எம்.பி ஈழவேந்தன் (91) வயது மூப்பால் கனடாவில் இன்று காலமானார். இலங்கையின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ஈழவேந்தன், பிரபாகரன் தலைமையிலான ஆயுதப்போராட்டத்தை முழுமையாக ஆதரித்தவர். 1990களில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஈழப் பிரச்னையை புரிய வைக்க, துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வந்தார். 2000ஆம் ஆண்டு மத்திய அரசு, தமிழ்நாட்டில் இருந்து ஈழவேந்தனை கனடாவுக்கு நாடு கடத்தியது.
Similar News
News March 11, 2026
வீட்டு சிலிண்டர் புக்கிங்கிலும் சிக்கல்

வளைகுடா போர் பதற்றத்தால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் வணிக சிலிண்டர் புக்கிங் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் புக்கிங்கிலும் சிக்கல் எழுந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. செல்போன் மூலம் சிலிண்டர் புக் செய்ய முயன்றால், ‘சுவிட்ச் ஆப்’ என பதில் வருவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். உங்கள் பகுதியில் இதுபோன்ற பிரச்னை இருக்கிறதா?
News March 11, 2026
இதனால் தான் சுதீஷுக்கு MP சீட் கொடுத்தாரா பிரேமலதா?

திமுக கொடுத்த MP சீட்டை முதலில் மூத்த நிர்வாகி ஒருவருக்கு கொடுக்கலாம் என தேமுதிக பிளான் செய்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் கட்சி மீதான நன்மதிப்பு கூடும் என பிரேமலதா கணக்கு போட்டாராம். ஆனால் குறுக்கே வந்த சுதீஷ் இத்தனை நாள் கட்சிக்காக உழைத்த தனக்கு MP சீட்டை வழங்கவில்லை எனில் கட்சியை விட்டே விலகுவேன் என முறையிட்டதாக பேசப்படுகிறது. இதனாலேயே அவருக்கு அந்த MP சீட் கொடுக்கப்பட்டது என்கின்றனர்.
News March 11, 2026
BREAKING: சிலிண்டர் விலை ₹4,000? அதிர்ச்சி

தமிழகத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சிலிண்டர் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளதால் ஹோட்டல்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி சிலர், சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வணிக சிலிண்டர் ₹4,000-க்கும், தருமபுரியில் ₹3,000-க்கும் விற்கப்படுவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.


