News December 21, 2025
மதுரை: அரசு அலுவலகம் புகுந்து அலுவலர் மீது தாக்குதல்

மேலூரை சேர்ந்த ஞானசேகர்(29) மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் உதவியாளராக உள்ளார். நேற்று அலுவலகத்திற்கு வந்த நாகராஜன்(52) என்பவர் தகராறில் ஈடுபட்டு, அருகில்
கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த ஞானசேகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எஸ்.எஸ்.காலனி போலீசார் நாகராஜனை கைது செய்தனர்.
Similar News
News December 24, 2025
மதுரையில் மின் திருட்டு; ரூ.21 லட்சம் அபாரதம்

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மதுரை அமலாக்க பிரிவு கோட்ட பொறியாளர் மனோகரன் தலைமையில் மதுரை திண்டுக்கல் விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சட்ட விரோதமாக மின் திருட்டு குறித்து அதிரடி சோதனைகள் நடந்தது. இதில் சுமார் 16 இடங்களில் சட்ட விரோதமாக மின் திருட்டு கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.21 லட்சத்து 81 ஆயிரத்து 104 விதிக்கப்பட்டது.
News December 24, 2025
மீனாட்சி கோயிலில் உண்டியல் வசூல் ரூ.1.24 கோடி

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இதன் துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நா.சுரேஷ் தலைமை வகித்தாா். இதில் ரொக்கமாக ரூ.1,24,69,880-மும், பலமாற்று பொன் இனங்கள் 545 கிராமும், பலமாற்று வெள்ளி இனங்கள் 1,875 கிராமும், வெளிநாட்டு பணத் தாள்கள் 187-மும் காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றன.
News December 24, 2025
மீனாட்சி கோயிலில் உண்டியல் வசூல் ரூ.1.24 கோடி

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இதன் துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நா.சுரேஷ் தலைமை வகித்தாா். இதில் ரொக்கமாக ரூ.1,24,69,880-மும், பலமாற்று பொன் இனங்கள் 545 கிராமும், பலமாற்று வெள்ளி இனங்கள் 1,875 கிராமும், வெளிநாட்டு பணத் தாள்கள் 187-மும் காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றன.


