News December 21, 2025
ராணிப்பேட்டை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 26, 2025
ராணிப்பேட்டை: உங்கள் வீட்டிற்கு பட்டா இல்லையா?- CLICK HERE

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 26, 2025
ராணிப்பேட்டையில் TNPSC குரூப் தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு

ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC GROUP தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு நாளை (டிச.27) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ள இத்தேர்வை எழுத விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் 2 புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணை 9952493516 தொடர்பு கொள்ளவும்.
News December 26, 2025
ராணிப்பேட்டை: தோல் தொழிற்சாலையில் மர்ம சாவு!

மேல்விஷாரம் டிஎம்ஷாப் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அங்குள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இன்று(டிச.26) திடீரென தொழிற்சாலைக்குள் உயிர் இழந்தார் .அவரது உறவினர்கள் தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனை செய்யவும் உடலை வாங்கவும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ரத்தினகிரி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


