News December 21, 2025

திருவள்ளூர்: 112 கிலோ குட்காவுடன் சிக்கிய வாலிபர்!

image

திருவள்ளூர்: அகரம் பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, மாரிமுத்து (32) என்பவருடைய கடையில் சோதனை செய்தனர். அப்போது, 12 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 75,000 ரூபாய். இதுகுறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், அவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 25, 2025

திருவள்ளூர்: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Assistant, Driver, Farm manager, program assistat உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, 10th, 12th, ஐடிஐ அல்லது டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. ( SHARE )

News December 25, 2025

திருவள்ளூரில் லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

திருவள்ளூர் மக்களே.., போலீஸ், தாசில்தார், எம்.எல்.ஏ, கார்ப்பரேஷன் மற்றும் இதர அரசு அலுவலர்கள், தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27667070) புகாரளிக்கலாம். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே உங்களது நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 25, 2025

திருவள்ளூர்: சண்டையை தடுக்க வந்தவருக்கு வெட்டு!

image

கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டுகாலனியை சேர்ந்தவர் ராஜ்குமார்(46). நேற்று(டிச.24) வீட்டின் அருகே விஜய்(28) என்பவருக்கும் புவனேஷுக்கும்(28) முன்விரோதம் காரணமாக ஒருவரையொருவர் கத்தியால் தாக்க முயன்றனர். இதைத் தடுக்க முற்பட்ட ராஜ்குமாரை புவனேஷ் கத்தியால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!