News December 21, 2025
கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகியவற்றிற்காக வரும் டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 21, 2025
போராட்டத்தில் ஈடுபட்ட 35 விவசாயிகள் மீது வழக்கு

கடலூர் அடுத்த கொடுக்கன்பாளையம், மலைஅடிகுப்பம் ஊராட்சியில் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் நேற்று தொடங்கினர். இந்நிலையில் இன்று (டிச.21) நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 35 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News December 21, 2025
கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

கடலூர் மக்களே.. பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <
News December 21, 2025
விருத்தாசலத்தில் வந்தே பாரத் நின்று செல்ல அனுமதி

சென்னை- திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் இனி விருத்தாசலத்தில் நின்று செல்லும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்துள்ளார். தொழில் மற்றும் பணி நிமித்தமாக, விரைவான பயணத்தை மேற்கொள்ள வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்ல வேண்டுமென்ற விருத்தாசலம் பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று ரயில்வே அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


