News December 21, 2025

திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை வாட்ஸ் அப் லிங்க் மூலம் அனுப்பப்படும் போலிகள் பற்றி விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 30000 வழங்கும் திட்டம் என்ற வாசகத்துடன் வாட்ஸ் அப் மூலம் லிங்க் அனுப்பப்படுவதை யாரும் கிளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் பண பறிப்பு வாய்ப்பு உள்ளதாகவும் அது அரசின் திட்டமும் இல்லை என அறிவிக்கவுள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News January 5, 2026

திருவாரூர்: ஜாமீனில் வந்தவர் மீது கொலை வெறி தாக்குதல்

image

பேரளம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சி வஸ்தராஜபுரம் பகுதியில் மகேஷ் என்பவர் மீது இட பிரச்சனை தொடர்பாக, சரவணன் என்பவர் புகார் அளித்ததன் பேரில் FIR போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்த மகேஷை நேற்று இரவு சரவணன் மற்றும் அவரது சகோதரர்கள் முத்துக்குமார், உதயகுமார் ஆகியோர் தாக்கியதில் பலத்த காயம் அடைந்து திருவாரூர் மருத்துவர் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News January 5, 2026

திருவாரூர்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 5, 2026

திருவாரூர்: காா் மோதி பெண் பலி-ஒருவர் கைது

image

பரவாக்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மனைவி கயல்விழி. இவர், நேற்று அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்றபோது அவ்வழியே மன்னாா்குடி பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பீட்டர் என்பவர் அதிவேகமாக ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, கயல்விழி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரவாக்கோட்டை போலீசார் பீட்டரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!