News December 21, 2025
செங்கல்பட்டு: தொடர் கைவரிசை – வலை வீசி பிடித்து போலீஸ்

செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர், சாலை, பகுதிகளில் தங்கி பணியாற்றும் கட்டுமான தொழிலாளர்களில் செல்போன் மற்றும் பணம் காணாமல் போவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இதுகுறித்த தொழிலாளர்களின் புகாரின் பேரில் சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்த போலீசார் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ஜனா என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 2 செல்போன் மற்றும் ரூ.4,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News December 30, 2025
செங்கை: மின்சார ரயில் மோதி பரிதாப பலி!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்(30) காட்டாங்கொளத்தூரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் மின்சார ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 30, 2025
செங்கை: இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய இருவர் கைது!

கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(22). மற்றும் 17 வயது சிறுவன். இருவரும் 21 வயது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும்17 வயது சிறுவனை கைது செய்தனர்.
News December 30, 2025
செங்கல்பட்டு விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளின் “நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று (டிச- 30) காலை 10:30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக, அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளது.


