News December 21, 2025

காஞ்சி: வேன் மோதி வாலிபர் பலி!

image

உத்திரமேரூர் அருகே குப்பையநல்லூரைச் சேர்ந்த அமல்ராஜ் (35), நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தனியார் பள்ளி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. பட்டஞ்சேரி பகுதியில் நடந்த இவ்விபத்தில் காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 29, 2025

காஞ்சிபுரத்தில் தலை நசுங்கி கோர பலி!

image

புத்தகரத்தை சேர்ந்த திவாகர்(30) என்பவர், பழைய சீவரம் சாலையில் இன்று(டிச.28) சென்று கொண்டிருந்தபோது, சந்திப்பு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். மேலும், திவாகருக்கு குழந்தை பிறந்து 3 மாதங்களே ஆனா நிலையில், இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், தவெக ஒன்றிய நிர்வாகி கோகுல் சம்பவ இடத்திற்கு வந்து, அவரை மருத்துவ மனையில் அனுமதித்தார்.

News December 29, 2025

காஞ்சிபுரம் போலீஸ் அதிரடி நடவடிக்கை!

image

வாலாஜாபாத் அடுத்த ஆசிரியர் நகரில், வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது சம்பந்தமாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பவரை வாலாஜாபாத் போலீசார் நேற்று(டிச.28) கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 20.662 கிலோ குட்கா பொருள் 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

News December 29, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.29) காலை வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!