News December 21, 2025
காலை அலாரம் அடிச்ச அப்புறம் தான் எழுந்திருக்குறீங்களா?

பலரும் காலை அலாரம் அடித்த பிறகே, எழுந்து வேக வேகமாக கிளம்புவோம். ஆனால், அந்த காலை அலாரம் இதயப்பிரச்னை இருப்பவர்களுக்கு ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். திடீரென அதிக சத்தம் கேட்டு எழுந்தால், Blood Pressure அதிகரிக்கும். இது Cardiovascular அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி, இதய பிரச்னைகள் அதிகரிக்குமாம். இதனை, Morning Blood Pressure Surge என்கின்றனர். மெல்லிய இசையை அலாரமாக வைக்கலாம்.
Similar News
News December 28, 2025
கண்ணதாசன் பொன்மொழிகள்!

*சிறகு கிடைத்தால் பறப்பது மட்டும் வாழ்க்கையல்ல. சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் வாழ்க்கை *தேவைக்கு மேல் பணமும், திறமைக்கு மேல் புகழும், உழைப்புக்கு மேல் பதவியும் கிடைத்து விட்டால், பார்வையில் படுவது எல்லாம் சாதாரணமாக தான் தெரியும் *சாக்கடை என்பது மோசமான பகுதிதான். ஆனால் அப்படி ஒன்று இல்லாவிட்டால் ஊரேச் சாக்கடை ஆகிவிடும் *அளவுக்கு மிஞ்சிய சாமர்த்தியம், முட்டாள்தனத்தில் போய் முடியும்.
News December 28, 2025
ஹிட்லர் ஆட்சி நடத்தும் CM ஸ்டாலின் : அன்புமணி

உரிமைக்காக போராடும் தொழிலாளர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்ப்பதாக அன்புமணி சாடியுள்ளார். திமுகவினரிடையே முறைகேடு தலைதூக்குமானால் சர்வாதிகாரியாக மாறுவேன் என கூறிய CM, அமைச்சர்களின் ஊழல் பற்றி ED அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். அடித்தட்டு மக்களிடம் வீரத்தை காட்டும் நவீன ஹிட்லரின் ஆட்சி 2026-ல் வீழ்வது உறுதி என X-ல் அவர் கூறியுள்ளார்.
News December 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 563
▶குறள்:
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
▶பொருள்: குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.


