News December 21, 2025
என் மகன் மரத்தில் கட்டி வைத்து எரிக்கப்பட்டான்: தந்தை

மகனை எவ்வாறு கொடூரமாக கொன்றனர் என்பதை தந்தையே விவரிப்பது எவ்வளவு பெரிய கொடுமையாக இருக்க முடியும்? பங்களாதேஷில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியை, அவரது தந்தை ரவிலால் தாஸ், முதலில் பேஸ்புக்கிலே பார்த்துள்ளார். அப்போது தான், அவரது மகன் வன்முறையாளர்களால் மரத்தில் கட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் பயங்கரமானது என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 31, 2026
H.ராஜாவுக்கு பக்கவாதம்.. அப்போலோ அறிக்கை

H.ராஜா உடல்நிலை குறித்து அப்போலோ ஹாஸ்பிடல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நேற்று திடீரென்று ஏற்பட்ட பக்கவாத பாதிப்பால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்கவாத பாதிப்பில் இருந்து குணமடைந்து வரும் அவர், குடும்பத்தினருடன் பேசி வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 31, 2026
பிப்ரவரியில் வானில் நிகழும் அற்புதங்கள்!

பிப்ரவரி மாதம் வானில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1 – பனி நிலவு, பிப்ரவரி 17 – சூரிய கிரகணம், பிப்ரவரி 18 – மிக மெல்லிய பிறை நிலவு புதன் கோளுக்கு அருகில் தோன்றும், பிப்ரவரி 19 – சனி கிரஹம் நிலவுக்கு அருகில் தோன்றும், பிப்ரவரி 28 – புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் வான்வெளியில் ஒரு வில் போன்ற வடிவில் அணிவகுக்கும்.
News January 31, 2026
பிப்ரவரி முதல் அரசு மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

தமிழக அரசு மாதிரிப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை பிப்ரவரியில் (திங்கள்கிழமை முதல்) தொடங்கவுள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் பிப்ரவரி 2-வது வாரம் வெளியாகும். அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கவுள்ளது. நவீன உள்கட்டமைப்புகளுடன் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளிகளில் நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.


