News April 30, 2024
தமிழறிஞருக்கு மாநகராட்சி மேயர் மரியாதை

தமிழறிஞர் கா.சு.பிள்ளை 79வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (ஏப்.30) திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் நினைவு ஸ்தூபிக்கு மாநகராட்சி மேயர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேரன் சுப்பிரமணியன், பேத்தி அழகம்மாள் மற்றும் குடும்பத்தினர், கவிஞர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 17, 2025
நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி பல்வேறு கட்சிகள் சார்பில் காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.
காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுகுமார் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருநெல்வேலி சந்திப்பு சாலை குமரன் கோயிலில் இரவு 7:00 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது.
News September 17, 2025
நெல்லை: பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500

நெல்லை மக்களே; 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கலாம். (தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்) *ஷேர்
News September 17, 2025
நெல்லை: ஆதாரில் திருத்தம் செய்ய வேண்டுமா?

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் அம்பாசமுத்திரம் வேலுச்சாமி திருமண மண்டபத்தில் வைத்து இன்று(செப்.17) காலை 11 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் ஆதார் பெயர் மாற்றம், திருத்தம், போன் நம்பர் இணைப்பு போன்ற சேவைகளை இதில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க.