News April 30, 2024
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு இன்று கூடுகிறது!

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 95ஆவது கூட்டம், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், தமிழக அரசின் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் பங்கேற்கவுள்ளார். ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவின்படி, கடந்த பிப்.1 – ஏப்ரல் 29 வரை 7.3 டிஎம்சி நீர் திறந்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 2.3 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.
Similar News
News February 5, 2026
தஞ்சை: புகார் எண் வெளியீடு!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தஞ்சை மாவட்டத்தில் திறக்கப்பட்டு உள்ளது. வெளி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் அல்லாத நபர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மோசடி செய்தால் புகார் தெரிவிக்க கட்டணமில்லா 18005993540 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News February 5, 2026
ALERT: Walking போது இதை செய்யாதீர்.. இதயம் பாதிக்கும்

ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி அவசியம் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், அதில் சில தவறுகள் செய்தால் அது இதயத்தைப் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். அதன்படி, ➤மிக வேகமாக நடப்பது ➤வார்ம் – அப் செய்யாமல் நடப்பது ➤நடைபயிற்சிக்கு முன்/பின் தண்ணீர் அருந்தாமல் இருப்பது ➤அதிகமாக சாப்பிட்ட பிறகு நடப்பது ➤மாசுபட்ட பகுதிகளில் நடப்பது ஆகிய தவறுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். SHARE.
News February 5, 2026
Layoff-ல் வேலையை இழந்த சசிதரூர் மகன்!

IT முதல் ஊடகத்துறை வரை, Layoff என்ற பணிநீக்கம் தொடர்ந்து வருகிறது. புகழ்பெற்ற ‘The Washington Post’ பத்திரிகை, மொத்தம் 300 பேரை நீக்கியுள்ள நிலையில், அதில் காங்கிரஸ் MP சசிதரூரின் மகன் இஷான் தரூரின் பெயரும் உள்ளது. 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தன்னை நீக்கியது குறித்து அவர் பதிவிட, பெயர், அனுபவம் என எதுவும் இன்றைய பணியிட சூழலில் பாதுகாப்பை தராது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.


