News April 30, 2024
சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நாராயண்பூர், கண்கோர் மாவட்ட எல்லைப் பகுதியில் இன்று காலை முதல் பாதுகாப்புப் படையினர், நக்சலைட்கள் இடையே தாக்குதல் நடந்த நிலையில், 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில் 87 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 150 பேர் வரை சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 5, 2026
ராகுல்காந்தியின் ஆடையை விமர்சிக்கும் பாஜக

காதி மற்றும் சுதேசி உடைகளின் மீது மரியாதை இல்லாதபோது, ராகுல் காந்திக்கு பார்லிமெண்ட் மீது எப்படி மரியாதை இருக்கும் என பாஜக MP நிஷிகாந்த் துபே விமர்சித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், இந்திரா காந்தி போன்ற காங்., தலைவர்கள் சேலை அணிந்தனர், ஆண்கள் குர்தா அணிந்தனர். ஆனால், ராகுல் காந்தி மட்டும் கிழிந்த, கந்தலான பேண்ட், சட்டை அணிவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீங்க?
News February 5, 2026
போன்/ கம்ப்யூட்டர் பார்த்து கண் எரிச்சலா? தவிர்க்க 7 டிப்ஸ்!

கணினி மயமாகிவிட்ட உலகில், கம்ப்யூட்டர், போனை பார்த்தபடியே தான் பலரும் வாழ்கிறோம். இதனால், கண் எரிச்சல் ஏற்பட்டு பலரும் அவதிப்படுகிறார்கள். அப்படி அவதிப்படுபவர்களில் ஒருவர் தான் நீங்கள் என்றால் உங்களுக்காக சில டிப்ஸை கொண்டு வந்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe செய்து அந்த டிப்ஸ்களை தெரிஞ்சிக்கோங்க. அப்படியே உங்களுக்கு தெரிஞ்ச சில டிப்ஸையும் கமெண்ட் பண்ணுங்க.
News February 5, 2026
மூத்த தமிழறிஞர் வ.ஜெயதேவன் காலமானார்

மூத்த தமிழறிஞர் வ.ஜெயதேவன்(79) உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ் அகராதி தொடர்பாக பல ஆய்வுக் கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ள இவருக்கு, 2013-ல் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது வழங்கி TN அரசு கௌரவித்தது. சென்னை பல்கலை.,யின் தமிழ் HOD பொறுப்பு வகித்த ஜெயதேவன், மத்திய, மாநில அரசுகள் அமைத்த பல கல்வி குழுக்களுக்கு தலைவராகவும் இருந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பெருங்குடியில் இன்று நடைபெற்றது.


