News December 20, 2025
தென்காசி மாவட்டத்தில் நாளை எழுத்து தேர்வு

2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் நேரடி சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தென்காசி மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் நாளை 21.12.2025 நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 3,335 மற்றும் பெண்கள் 1,156 என மொத்தம் 4,491 விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் தேர்வு பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்,
Similar News
News January 15, 2026
தென்காசி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – APPLY

தென்காசி மக்களே; மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். (or)
2.pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்கு பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 15, 2026
தென்காசி : செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 15, 2026
தென்காசியில் உச்சத்தை தொட்ட கரும்பு விலை

தமிழர்கள் திருநாளான பொங்கலை முன்னிட்டு வீடுகளில் மஞ்சள் கரும்பு காய்கறிகள் உள்ளிட்டவைகள் வைத்து சூரியனுக்கு படையல் இட்டு பொங்கல் விடுவது வழக்கமாக இருந்து வருகின்றது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு அதிக அளவில் விற்பனையானது. இந்நிலையில் நேற்று கரும்பு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இன்று ஒரு கரும்பு 80 ரூபாய் வரை விற்பனையானனது.


