News December 20, 2025

திண்டுக்கல் மக்களுக்கு எச்சரிக்கை!

image

WhatsApp, SMS அல்லது Telegram மூலம் “Work From Home / Task” என்ற பெயரில் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி மக்கள் ஏமாறுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. முதலில் சிறு பணம் கொடுத்து நம்பிக்கை பெற்ற பின்னர் அதிக பணம் பறிக்கும் இம்மோசடி குறித்து விழிப்புணர்வுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏமாற்றத்துக்கு ஆளானால் 1930 எண்ணை தொடர்பு கொள்ளவும் & <>www.cybercrime.gov.in<<>>-ல் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

Similar News

News January 1, 2026

திண்டுக்கல் வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

image

திண்டுக்கல் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News January 1, 2026

திண்டுக்கல்லில் புல்லட் திருடன் கைது

image

திண்டுக்கல் டெலிபோன் காலனியில் வெங்கடேஷ் என்பவரது புல்லட்டை வீட்டிற்கு வெளியே இரவு நேரத்தில் நிறுத்தி இருந்த நிலையில் காணாமல் போனது. இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், திண்டுக்கல் நாகல்நகர், மென்டோசா காலனியைச் சேர்ந்த கிஷோர் என்பவர் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து புல்லட்டை பறிமுதல் செய்தனர்.

News January 1, 2026

திண்டுக்கல் வீடு கட்ட ரூ.2.50 லட்சம்: விண்ணப்பிப்பது எப்படி?

image

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க<> pmay-urban.gov.in<<>> என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் உங்களுடைய முகவரி, வருமானம், ஆதார் உள்ளிட்ட விவரங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள்அருகே உள்ள இ சேவை மையத்தில் பதிவு செய்யலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!