News April 30, 2024

கிருஷ்ணகிரி: சீரான குடிநீர் வழங்க கலெக்டர் உத்தரவு

image

கிருஷ்ணகிரியில், ஊரக வளர்ச்சிதுறை சார்பில் நடைபெற்றுவரும் திட்ட பணிகள் மற்றும் சீரான குடிநீர் விநியோக பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Similar News

News April 19, 2025

கிருஷ்ணகிரி முக்கிய தொடர்பு எண்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு துறை அலுவலர்களின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் 04343239400, மாவட்ட வருவாய் அலுவலர் 04343231300, திட்ட அலுவலர் 04343239364, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 04343239030, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 04343235655, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் 04343235591, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் 04343238777. ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

அரசு போக்குவரத்துறையில் வேலை.. கடைசி வாய்ப்பு

image

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் திங்கள்(ஏப்.21) ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உங்க நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

ஓடும் ரயிலில் தவறி விழுந்து பைனான்ஸ் ஊழியர் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 27). இவர் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்ய ஜோலார்பேட்டை – கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் பயணம் செய்த போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!