News April 30, 2024
திருவள்ளூர்: வெயில் உயிரை பறித்த கொடுமை

மாதவரம் தபால் பெட்டி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மதியம் சைக்கிளில் வந்த முதியவர் ஒருவர் கோடை வெப்பம் தாளாமல் திடீரென சுருண்டு விழுந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு சாலையோரம் கொண்டு வந்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாதவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
Similar News
News March 7, 2026
திருவள்ளூர்: உயர்ந்த கேஸ் விலை! ; மானியம் வரலையா?

திருவள்ளூர் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News March 7, 2026
பள்ளிப்பட்டு: மது போதையில் நண்பனை கொன்றவர் கைது

திருவள்ளூர்: பள்ளிப்பட்டை சேர்ந்த மகேஷ்பாபு மற்றும் பிரகாஷ், நண்பர்கள். பிரகாஷுக்கு, கடந்தாண்டு ரூ.10,000 மகேஷ்பாபு கடனாக கொடுத்திருந்தார். நேற்று(மார்ச் 6) காலை இருவரும், பாழடைந்த தனியார் பள்ளி வளாகத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மகேஷ்பாபு, மீண்டும் பிரகாஷிடம் பணம் கேட்டுள்ளார். மதுபாட்டிலை உடைத்து, மகேஷ்பாபுவின் கழுத்தில் குத்தியுள்ளார். தகவலறிந்த போலீசார் பிரகாஷை கைது செய்தனர்.
News March 7, 2026
திருவள்ளூர்: போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு

எண்ணுாரைச் சேர்ந்த ராஜா(52). இவர், 2019ஆம் ஆண்டு, அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது, உறவினர் வீட்டின் மாடியில் துணி எடுக்க வந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். தகவலறிந்த எண்ணுார் மகளிர் போலீசார், வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ராஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.8,000 அபராதமும் விதிக்கப்பட்டது.


