News December 20, 2025

புதுவை: காசு வைத்து சூதாட்டம் – 9 பேர் கைது

image

உப்பளம் எக்ஸ்போ புதிய துறைமுக மைதானத்தில், சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அங்கு சூது விளையாடியவர்களை பிடித்து விசாரித்ததில், முதலியார்பேட்டை சேர்ந்த ராஜி, வாணரப்பேட்டை சேர்ந்த அருள், பிரகாஷ், சத்தியமூர்த்தி, அற்புதராஜ், பாவாணர் நகர் தமிழ்மணி, ஆட்டுப்பட்டி முருகன், வம்பாகீரப்பாளையம் தர்மேந்திரன் சுரேஷ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News

News December 27, 2025

புதுவை: கையில் வெட்டு-கூலித்தொழிலாளி படுகாயம்

image

லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் கம்பி கட்டும் தொழிலாளி ராஜசேகரன் (52). இவர் சம்பவத்தன்று பிச்சை வீரன்பேட்டில் ஒரு கட்டடத்தின் 3வது மாடியில் சென்ட்ரிங் பலகை அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது பலகையை எந்திரம் மூலம் வெட்டியபோது, எதிர்பாராத விதமாக அவரது வலது கையில் வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 27, 2025

புதுவை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

புதுவை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவனங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி உதவுங்க…

News December 27, 2025

புதுவை: போலி மருந்து வழக்கு CBI-க்கு மாற்றம்

image

புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தை CBI விசாரிக்க உள்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் இதுவரை 16-நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இவ்வழக்கை CBI மற்றும் NIA விசாரிக்க துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். இந்த நிலையில், இவ்வழக்கை CBI-க்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!