News December 20, 2025
தேனியில் கஞ்சா பதுக்கிய இளைஞர் கைது!

போடிநாயக்கனூர் நகர் போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (டிச.19) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த முத்துக்குமார் (27) என்பவரை சோதனை செய்த பொழுது அவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் முத்துக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Similar News
News December 28, 2025
தேனி: அரசு பஸ் மீது பைக் மோதி நடத்துனர் பலி!

பெரியகுளம், சில்வார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம் (54). அரசு பேருந்து நடத்துனரான இவர் நேற்று முன் தினம் பணி முடிந்து அவரது டூவீலரில் வீடு திரும்பியுள்ளார். காமாட்சிபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ் மீது இவரது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் விசாரணை.
News December 28, 2025
தேனி மக்களே.. இனி Whatsapp மூலம் தீர்வு…

தேனி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
News December 28, 2025
தேனி: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ

பெரியகுளம் ஒன்றியம், எண்டப்புளி பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (24). இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை வீட்டில் வைத்து மே மாதம் திருமணம் செய்தார். தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து பெரியகுளம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் அளித்த புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் அரவிந்தன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


