News December 20, 2025
புதுகை: MLA சி.விஜயபாஸ்கர் வழக்கு ஒத்திவைப்பு

விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக மாநில ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சி.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் வழக்கை வரும் ஜன.27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News December 21, 2025
புதுகை: 12th போதும்.. ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
புதுகை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
புதுக்கோட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று (டிச.21) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்காளர் பட்டியலில் புதியதாக வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் 18 வயது நிரம்பியவர் தங்களது பெயரை வாக்காளர், தேசிய வாக்காளர் சேவை போர்டல் (https://voters.eci.gov .in) மூலம் பெயர் சேர்க்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


