News December 20, 2025

யுவராஜ் சிங்கின் ₹2.5 கோடி சொத்துகள் முடக்கம்

image

யுவராஜ் சிங், உத்தப்பா, நடிகைகள் நேஹா சர்மா, ஊர்வசி ரவுதேலா உள்ளிட்டோரின் சொத்துகளை ED முடக்கியுள்ளது. சட்டவிரோத சூதாட்ட செயலிகள் கோடிக்கணக்கில் பண முறைகேடு செய்த வழக்கை ED விசாரித்து வருகிறது. அதன் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் பெற்ற பணத்தில் அவர்கள் சொத்துகளை வாங்கியது உறுதியானது. இந்நிலையில், யுவராஜின் ₹2.5 கோடி, சோனு சூட்டின் ₹1 கோடி என மொத்தமாக ₹7.93 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

Similar News

News December 27, 2025

தலைநகரம் இல்லாத நாடு எது தெரியுமா?

image

பொதுவாக ஒருநாடு சீராக இயங்குவதற்கு தலைநகர் என்பது அவசியம். அங்குதான் நாட்டின் முக்கியமான அரசு அலுவலகங்கள் செயல்படும். ஆனால் தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நவ்ரு என்ற நாட்டிற்கு தலைநகரே கிடையாது. காரணம் அந்த தீவு நாட்டின் மொத்த பரப்பரளவே 21sq km., தான். உலகின் 3-வது சிறிய நாடான நவ்ருவில் மொத்த மக்கள்தொகை 12 ஆயிரம் மட்டுமே. எனவே தான் அங்கு தலைநகர் தேவையற்றது என அந்நாட்டு அரசு கருதுகிறது.

News December 27, 2025

RSS-க்கு எதிராக விஜய் வாய் திறந்தாரா? திருமா

image

கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான சனாதனத் தாக்குதலை பற்றி விஜய் வாய் திறந்தாரா என திருமாவளவன் விமர்சித்துள்ளார். விஜய்யும் சீமானும் RSS, சனாதன சக்திகளுக்கு துணைபோகும் வகையில் செயல்படுகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. தவெக ஒருபுறம் பெரியாரிய, திராவிட அரசியலை பேசுகிறோம் என்றும், நாதக தமிழ் தேசியம் பேசுகிறோம் என்றும் நாடகமாடுகிறார்கள். இதை TN மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என பேசினார்.

News December 27, 2025

இந்தியர்களை அதிகமாக நாடு கடத்தியது இந்த நாடு தான்!

image

சட்டவிரோத குடியேற்றம், முறையான அனுமதியின்றி பணிபுரிதல், குற்றச்செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல காரணங்களால் பிறநாடுகளில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். 2025-ல், 81 நாடுகளில் இருந்து 24,600 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், முதலிடத்தில் சவுதி அரேபியாவும் (11,000 பேர்), 2-வது இடத்தில் USA-வும் (3,800 பேர்) உள்ளன.

error: Content is protected !!