News December 20, 2025

செங்கல்பட்டு: வேன்-பைக் மோதி 2 பேர் துடி துடித்து பலி!

image

ஆதனுர் கூடுவாஞ்சேரி சாலையில் நேற்று இரவு வேன் வேகமாய் சென்றது. அப்போது மாடு குறுக்கே வந்ததால் ட்ரைவர் வண்டிய திருப்ப முயன்றனர், அப்போது எதிர்ப்பாராத விதமாக எதிரே வந்த 2 பைக் மீது அடுத்தடுத்து வேன் மோதி பைக்கில் வந்த இருவரும் தூக்கி வேசப்பட்டனர். இந்த விபத்தில் ராஜ்குமார் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துலயே பலியானார்கள். மேலும் இருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ட்ரைவரை கைது செய்தனர்.

Similar News

News December 25, 2025

செங்கல்பட்டு: பணியின் போது மயங்கி விழுந்து பலி!

image

திருப்போரூர் ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில், நாகராஜ் (50) என்ற தொழிலாளி பணியின்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். ரசாயன கசிவு காரணமாக அவர் இறந்தாரா அல்லது உடல்நலக் கோளாறா என்பது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டது.

News December 25, 2025

செங்கல்பட்டு: இதுவரை 24,906 பேர் பாதிப்பு!

image

தமிழகத்தில் செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. செங்கல்பட்டில் மட்டும் இந்த ஆண்டு 24,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்; இது கடந்த ஆண்டை விட (48 பேர்) குறைவு என்றாலும், பாதிப்பு தொடர்கிறது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

News December 25, 2025

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (டிசம்பர்- 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!