News December 20, 2025
கள்ளக்குறிச்சி: சாமி கும்பிட வந்த மகனுக்கு பேரிழப்பு

சேலத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (33), தாய் உண்ணாமலை-யுடன் (65) வாணாபுரத்தில் உள்ள கோவிலுக்கு பைக்கில் சென்றுள்ளார். சாமி கும்பிட்டுவிட்டு ஊர் திரும்பியபோது, வடபொன்பரப்பி அருகே வேகத்தடையில் நிலைத்தடுமாறி தாயும், மகனும் கீழே விழுந்தனர். இதில் 2 பேரும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு உண்ணாமலை உயிரிழந்தார். இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
கள்ளக்குறிச்சி:இனி ஆதார் கார்டு வாங்க..HI போடுங்க!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 25, 2025
செயற்கை கால் பொருத்தும் முகாம் – துவக்கி வைத்த MP!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரிமாசங்கம் நடத்தும் செயற்கை கால் பொருத்தும் முகாம் தொடர்ந்து ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று டிச 25, இந்த முகாமினை கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் மலையரசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் கால்கள் இழந்த ஏராளமானோர் செயற்கைகால் பொருத்தி சென்றனர்.
News December 25, 2025
கள்ளக்குறிச்சி: புதிய BIKE வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <


