News December 20, 2025
விருதுநகர்: ஒரேநாளில் இரண்டு கொலைகள்

விருதுநகரில் நேற்று ஒரே நாளில் 2 கொலைகள் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மத்தியசேனையில் பட்டாசு ஆலை காவலாளியாக பணியாற்றிய செல்லச்சாமியை (57) கால்நடை தீவனம் பறிக்க வந்த படுகளம் (64) என்பவர் வெட்டி கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் ராஜபாளையம் சமுசிகாபுரத்தை சேர்ந்த வேல்முருகனை (37), மது போதையில் பாலமுருகன் (24) என்பவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார்.
Similar News
News December 28, 2025
விருதுநகர்: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 28, 2025
விருதுநகர்: இனி Whatsapp மூலம் தீர்வு!..

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
News December 28, 2025
சிவகாசியில் வீடு புகுந்து ஜெயின் பறிப்பு

சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் மாலா பிரியதர்ஷினி(44). இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பழக்கத்தில் இருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த அஜித்குமார், மாலா பிரியதர்ஷினியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த அரைப்பவுன் தங்கதாலி, 2 பவுன் வளையலை பறித்து சென்றார். அஜித்குமார் அவரது மனைவி ஐஸ்வர்யா மீது வழக்குப்பதியப்பட்டது.


